எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியவை தாம் - எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே. . .
-------------------------------------------------------------
கும்பலில் எல்லாம் நீ போகாதே
யார் யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை. . .
-------------------------------------------------------------
தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது
-------------------------------------------------------------
சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்...
-------------------------------------------------------------
(தபு சங்கரின் 'விழி ஈர்ப்பு விசை' நூலிலிருந்து ...)